Wednesday, 21 September 2016

காற்றின் கரிசனம்

நேற்று முன்தினம் காலை அலுவலகத்திற்கு சென்னை மாநகர பேருந்தில் சென்றுகொண்டிருதேன். இடம் இல்லாததால் நின்றுகொண்டே பயணம் செய்தேன். பேருந்தில் எதிரெதிரே இருஇரு இருக்கைகள், இரண்டு ஜன்னலோரத்திலும் முகம்தெரியாத ஆண்ங்கள். மதிற்றொருபக்கம் இருந்த இரண்டு இருக்கைகளில் பெண்கள். அந்த இரண்டு பெண்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்.
பேருந்து நிறுத்தம் ஒன்று வந்தவுடன் ஒருபக்கம் இருந்த இளைஞன் தனது இருக்கையில் இருந்து வெளியே வர முற்பட்டபொழுது எதிரே இருந்த பெண்ணின் சுடிதார் சால்வையின் கடைநிலை பாகங்கள் பேருந்தின் தரையை உரசிக்கொண்டிருந்தது. அவன் வெளியே வர சிறிதே ஓர் தென்றல்  அந்த பெனின் சால்வை தீண்ட நகர்ந்தது. அடுத்த நொடி அவன் அந்த சால்வை முன் இருந்த இடத்திலே காலைவைத்தான் தெரியாமல்.

இந்த இயற்கையின் அழகை நான் பார்த்ததற்கும்  பார்க்கவைத்ததற்கும் இயற்கைக்கு நன்றி!!!

- எல்லாம் நன்மைக்கே

No comments:

Post a Comment